ADDED : மார் 11, 2016 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிள்ளைகளை சொந்தக்காலில் நிற்க செய்வது பெற்றோரின் கடமை.
* இடைவிடாமல் கடவுளைச் சிந்திப்பதும், மனம் ஒன்றி வழிபாடு செய்வதும் மகிழ்ச்சி தரும் இனிய அனுபவங்கள்.
* பயனற்ற வீண் ஆராய்ச்சியை கை விட்டு, கடவுளை பூரணமாக நம்புங்கள்.
* ஞானிக்கு கடவுள் ஒளிமயமாகவும், சாமான்ய மனிதர்களுக்கு அன்புமயமாகவும் காட்சியளிக்கிறார்.
* கடவுள் கற்பக மரமாக கேட்டதை எல்லாம் தரத் தயாராக இருக்கிறார். அதற்கான தகுதியை வளர்த்து கொள்வது நம் கடமை.
-ராமகிருஷ்ணர்